ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டின் பிலிகுண்டுலு எல்லையை வந்தடைந்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டின் பிலிகுண்டுலு எல்லையை வந்தடைந்துள்ளது. கபினியிலிருந்து விநாடிக்கு சுமார் 25,000 கனஅடி திறக்கப்பட்டதாகத் தகவல்; ஒகேனக்கல் நீர்வரத்து 1,000 கனஅடி உயர்ந்து 9,000 கனஅடியாகப் பதிவாகியுள்ளது. நீர்த்திறப்பு மற்றும் மழையைப் பொறுத்து வரத்து மேலும் உயரலாம்; நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.